Wednesday, June 12, 2013

அரசுப் பள்ளி சாதனை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர அரசு நிதியுதவி




திருவாரூர், ஜூன் 11 -திருவாரூர் மாவட்டத்தி லுள்ள அரசுப் பள்ளிகளில் படித்து பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த 3 மாண வர்கள், 3 மாணவிகள் மற் றும் மிகப் பிற்படுத்தப் பட்ட, சீர்மரபினர் வகுப் பைச் சார்ந்த 2 மாணவர் கள், 2 மாணவியர் என மொத்தம் 10 மாணவ - மாணவியர், அவர்கள் விரும்புகிற- தமிழகத்தில் உள்ள சிறந்த தனியார் மேல்நிலைப்பள்ளிகளில் சேர்ந்து மேல்நிலைக்கல்வி பெற அரசால் நிதியுதவி வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் உதவி பெறும் மாணவ, மாணவிய ரின் பெற்றோரது ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு உயர்ந்தபட்சமாக ஆண் டிற்கு 28 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இரண்டாண்டுக ளுக்கு ரூ. 56 ஆயிரம் வழங் கப்படுகிறது.தகுதியுடைய மாணவ, மாணவியர் மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு உரிய காலத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு திருவா ரூர் மாவட்ட ஆட்சித்தலை வர் சி.நடராசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment