Tuesday, June 4, 2013


                      உலகின் மிக நீண்ட வார்த்‌தை கண்டுபிடிப்பு



பெர்லின் : ஜெர்மனி, உலகின் மிக நீண்ட வார்த்தையை உருவாக்கியுள்ளது. Rindfleischetikettierungsuberwachungsaufgabenubertragungsgesetz என்ற இந்த நீண்ட வார்த்தைக்கு மாட்டிறைச்சி பதப்படுத்தலை கண்காணிக்கும் பிரதிநிதிகளுக்கான சட்டம் என்ற பொருள். ஜெர்மன் மொழி்யில் தான் கடினமான வார்த்தைகள் அதிகம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.




கோவை:போதை மயக்கத்தில் ரோட்டில் தாய் விழுந்து கிடந்த நிலையில், தாய்ப்பாலுக்காக தவித்து குழந்தை அழுதது பார்ப்பவர்கள் மனதை, பதைபதைக்க வைத்தது.



                                                            

கோவை லங்கா கார்னர் பகுதியில் நேற்று மாலை 3.00 மணியளவில் பெண் ஒருவர் மயங்கிக் கிடந்தார். அவர் அருகில், ஒரு வயதுடைய குழந்தை அழுது கொண்டிருந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து திகைத்தனர். குழந்தை அழுவதை கண்ட சிலர், மனமிறங்கி அருகில் சென்று பார்த்தபோது, மதுவாடை அடித்தது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அந்த பெண்ணை எழுப்ப முயன்றனர். ஆனால், அவர், அளவு கடந்த போதையில் தத்தளித்து கொண்டிருந்தார். ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆகியும் தாய்க்கு மயக்கம் தெளியவில்லை. குழந்தை தாயிடம் பால் குடிக்க முயற்சித்தது. ஆனால், குழந்தையால் முடியாமல் போகவே, தொடர்ந்து கதறி அழுதது. அருகிலிருந்த சிலர், குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்தனர். பாலை குடித்த குழந்தை, சிறிது நேரம் அமைதியாக இருந்தது. 
நீண்ட நேரமாகியும், தாய் போதையில் இருந்து மீளவில்லை. கூட்டத்தை கண்டு, குழந்தை மிரண்டு அழத்துவங்கியது. ஒரு மணி நேரத்துக்கு பின், தாய் எழுந்து உட்கார்ந்தார். அவரால் எழுந்து நடக்கவோ, குழந்தையை அரவணைக்கவோ, முடியவில்லை. 
குழந்தையின் நிலையை பார்த்த அந்த வழியே சென்றவர்கள், ""எத்தனையோ பேர், குழந்தை இல்லாமல் கோவில், குளம் என சென்று வருகின்றனர்... பெத்த புள்ளைய காப்பாத்த தெரியலையே'' என, பரிதாபப்பட்டனர்.


 மாணவர் சேர்க்கை படிவம்/ மாதாந்திர அறிக்கை/                                                              சம்பளப்பட்டியல்


           பிளஸ் 2 உடனடித் தேர்வு: தத்கல் திட்டம் அறிவிப்பு


பிளஸ் 2 உடனடித் தேர்வுக்கு, தத்கல் திட்டத்தின் கீழ், வரும் 6,7ம் தேதிகளில், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுத்துறை அறிவிப்பு: பிளஸ் 2 உடனடித் தேர்வு, விரைவில் துவங்க உள்ளது. இத்தேர்வை எழுத, ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள், தத்கல் திட்டத்தின் கீழ், வரும், 6,7 தேதிகளில்,www.dge.tn.nic.in என்ற இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம். 7ம் தேதி, மாலை, 5:00 மணி வரை, விண்ணப்பிக்கலாம். 

ஒரு பாடத்திற்கு, 85 ரூபாய் மற்றும் சிறப்பு கட்டணம், 1,000 ரூபாய் செலுத்த வேண்டும். இணையதளம் வழியாக பதிவிறக்கம் (டவுண்-லோட்) செய்யும் செலான் மூலம், வங்கியில், தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை, 8ம் தேதிக்குள், எஸ்.பி.ஐ., வங்கியின், ஏதாவது ஒரு கிளையில் செலுத்தலாம். 

இணையதளத்தில், பூர்த்தி செய்து, புகைப்படத்துடன் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தேர்வுக் கட்டணம் செலுத்திய ரசீது மற்றும் கடந்த மார்ச்சில் எழுதி பெற்ற மதிப்பெண் பட்டியலை இணைத்து, 14, 15 தேதிகளில், சென்னையில் உள்ள தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில், நேரில் சமர்ப்பித்து, ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

               SSLC - Instant Exam Online Apply - Starts From Today


அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-600 006 ஜுன்/ஜுலை 2013-ல் நடைபெறவுள்ள இடைநிலை சிறப்புத் துணைத் தேர்வெழுத ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


         நடைபெறவுள்ள ஜுன்/ஜுலை, 2013 இடைநிலை சிறப்புத் துணைத் தேர்வெழுத தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வர்கள் www.det.tn.nic.in என்ற இணைய தளத்திற்குச் சென்று, அதில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி, விவரங்களைப் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. 
விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்: 
1. மார்ச் 2013, இடைநிலைத் தேர்வினை பள்ளி மாணாக்கராகவோ அல்லது தனித்தேர்வர்களாகவோ தேர்வெழுதியிருக்க வேண்டும்.
2. மார்ச் 2013, இடைநிலைத் தேர்வில் தேர்ச்சி பெறாத/வருகை புரியாத அனைத்துப் பாடங்களையும் உடனடித் தேர்வில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.
          அறிவியல் பாட செடீநுமுறைத் தேர்வு : மார்ச் 2013, இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்விற்கு அறிவியல் பாடம் தவிர இதர பாடங்களில் தேர்வெழுத நீதிமன்ற /மாவட்ட ஆட்சியரின் ஆணையின்படி அனுமதிக்கப்பட்டவர்கள் தற்போது அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்து கொள்ள உடனடியாக மாவட்டக் கல்வி அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பயிற்சியில் கலந்து கொண்டு செய்முறைத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். அவர்கள், ஜுன் 2013 உடனடித் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
         தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை: மார்ச் 2013 இடைநிலைத் தேர்வில் தேர்ச்சி பெறாத/வருகை புரியாத அனைத்து பாடத்திற்கும் ரு.125/- தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும். ஆன்-லைன் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட Confirmation Copy மூலமே தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும் . பதிவிறக்கம் செய்த சலானில் குறிப்பிட்டுள்ள தொகையினை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் எந்தவொரு கிளையிலும் அரசுத் தேர்வுகள் இயக்குநர், சென்னை-6 என்ற பெயரில் தேர்வுக் கட்டணத் தொகையினை செலுத்தலாம். பாடசாலை 
    2... முக்கிய குறிப்பு : பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள பத்து இலக்க விண்ணப்ப எண்ணை தவறாமல் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே எந்தவொரு சந்தேகங்களுக்கும், தேர்வுத் துறையிடம் முறையீடு செய்யவோ அல்லது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பெறவோ முடியும். எனவே, பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை ஒளிநகல் (Xerox) எடுத்து தனித்தேர்வர்கள் தங்கள்வசம் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
 ஆன்-லைனில் விண்ணப்பிப்பதற்கான தேதிகள்:
         தேர்வர்கள் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் 03.06.2013 (திங்கட் கிழமை) முதல் 05.06.2013 (புதன்கிழமை) நண்பகல் 12 மணிவரை தங்கள் விண்ணப்பத்தினை ஆன்-லைனில் பதிவு செடீநுயலாம். பதிவு செய்த விண்ணப்பத்தினையும், தேர்வுக்கட்டணம் செலுத்தியதற்கான Bank சலானையும் 05.06.2013 நண்பகல் 12 மணிவரை மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். தேர்வுக் கட்டணத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் எந்தவொரு கிளையிலும் செலுத்த வேண்டிய இறுதி தேதி 06.06.2013 (வியாழக் கிழமை) . செலுத்த வேண்டிய நேரம் வங்கியின் விதிகளுக்குட்பட்டதாகும். 
ஆன்லைனில் பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை சமர்ப்பித்தல் :
அ) பள்ளி மாணாக்கர் உடனடித் தேர்விற்கான Confirmation Copy எனக் குறிப்பிட்ட ஆன்லைன் விண்ணப்பத்துடன், தேர்வுக்கட்டணம் செலுத்திய SBI Bank சலான் மற்றும் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் விவரப்பட்டியல் ஆகியவற்றை இணைத்து அவர்கள் பயின்ற பள்ளித் தலைமை ஆசிரியரிடம் 06.06.2013-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். 
ஆ) மார்ச் 2013, இடைநிலைத் தேர்வினை தனித்தேர்வர்களாக தேர்வெழுதி தேர்ச்சி பெறாதோர் உடனடித் தேர்விற்கான Confirmation Copy எனக் குறிப்பிட்ட ஆன்-லைன் விண்ணப்பத்துடன், தேர்வுக்கட்டணம் செலுத்திய SBI Bank சலான் மற்றும் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் விவரப்பட்டியல் ஆகியவற்றை இணைத்து அவர்தம் வருவாய் மாவட்டத்திற்குரிய அரசுத் தேர்வுகள் மண்டலத்துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாக மட்டுமே 10.06.2013-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். தபால் மூலம் அனுப்பும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். 
ஜுன் / ஜூலை 2013 சிறப்பு துணைத் தேர்வுகள் 24.06.2013 முதல் 01.07.2013 வரை நடைபெறும். நாள் : 29.05.2013

12ஆம் வகுப்பு மார்ச் பொது தேர்வு எழுதியவர்களில் நகல் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு இதுவரை கீழ்க்கண்ட பாடங்களுக்கு விடைத்தாள் நகல் வெளியிடப்பட்டு உள்ளது


Subject CodeSubject NameCandidates are allowed to apply for revaluation/re-totalling for the following subjects ONLY
007ChemistryFrom 29.05.2013 to 01.06.2013 ONLY @ dge.tn.nic.in
009BiologyFrom 01.06.2013 to 04.06.2013 ONLY @ dge.tn.nic.in
011BotanyFrom 03.06.2013 to 06.06.2013 ONLY @ dge.tn.nic.in
013ZoologyFrom 03.06.2013 to 06.06.2013 ONLY @ dge.tn.nic.in
005PhysicsFrom 03.06.2013 to 06.06.2013 ONLY @ dge.tn.nic.in
041MathematicsFrom 03.06.2013 to 06.06.2013 ONLY @ dge.tn.nic.in

          அரசு பெண்கள் பள்ளியில் ஆசிரியர் நியமனத்திற்கு தடை



                                 

பள்ளிகளில், பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், அரசு பெண்கள் பள்ளியில், இனி, தலைமை ஆசிரியர் பணியிடம் முதல், பாட ஆசிரியர்கள் வரை, அனைத்து இடங்களிலும், ஆசிரியைகள் மட்டுமே நியமனம் செய்யப்படுவர் என, தமிழக அரசு, அதிரடியாக அறிவித்துள்ளது.

ஆண்கள் பள்ளியில், ஆண் ஆசிரியர்கள் மட்டுமே இருப்பர். இருபாலர் பயிலும் பள்ளி என்றால், ஆசிரியைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

சமீப காலமாக, பள்ளிகளில், பாலியல் பலாத்கார சம்பவங்கள், அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற செயல்களில், ஆசிரியர்களே ஈடுபடுவது தான், அதிகமாக நடக்கிறது. பல்வேறு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வழக்கமாக, அதிகபட்ச தண்டனையாக, சஸ்பெண்ட் இருக்கும். ஆனால், தற்போது, சம்பந்தபட்ட ஆசிரியரை, டிஸ்மிஸ் செய்வது, அவரின், கல்வி சான்றிதழ்களை ரத்து செய்வது என, கடும் நடவடிக்கைகள், எடுக்கப்படுகின்றன.

அரசு உத்தரவு விவரம் :தேசிய குழந்தைகள் நல உரிமை ஆணையம் உள்ளிட்ட பல அமைப்புகள், பாலியல் பலாத்கார புகார்கள் தொடர்பாக, கிடுக்கிப்பிடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதுபோன்ற சூழலில், பள்ளிகளில், பாலியல் பலாத்கார சம்பவங்களை தடுக்க, தமிழக அரசு, அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசு பெண்கள் பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பெண்கள் பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பணியிடம் முதல், பாட ஆசிரியர் பணியிடம் வரை, அனைத்து இடங்களிலும், ஆசிரியைகளை மட்டுமே, பணி நியமனம் செய்ய வேண்டும் என, கல்வித்துறைக்கு, தமிழக அரசு உ த்தரவிட்டுள்ளது. 


அதேபோல், ஆண்கள் பள்ளியில், ஆண் ஆசிரியர்கள் மட்டும் பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழக அரசு தெரிவித்துள்ளது.மாணவர், மாணவியர் என, இரு பாலர் பயிலும் பள்ளிகளாக இருந்தால், அங்கு, ஆசிரியைகளுக்கு, முதலில், முன்னுரிமை தர வேண்டும் எனவும், தமிழக அரசு, அறிவுறுத்தி உள்ளது. 

இதன்மூலம், பள்ளி வளாகங்களில், பாலியல் குற்றங்களை, முழுமையாக தடுக்க முடியும் என, தமிழக அரசும், கல்வித்துறையும் நம்புகிறது. தமிழக அரசின் உத்தரவு குறித்த தகவல், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அரசின், புதிய நடவடிக்கையால், ஏதாவது குழப்பங்கள் வர, வாய்ப்பு இருக்கிறதா என, அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது: நடைமுறை ரீதியாக, எந்த சிக்கலும் வர, வாய்ப்பு இல்லை. ஆசிரியர் பணிபுரியும் இடத்தில், ஆசிரியை பணிபுரிவார்; அவ்வளவு தான். 

பெண்கள் பள்ளிகளின் எண்ணிக்கை, மிகவும் குறைவு தான். அதேபோல், ஆண்கள் பள்ளிகளின் எண்ணிக்கையும் குறைவு தான். இந்த இரு பள்ளிகளின் எண்ணிக்கை, 1,000த்திற்குள் தான் இருக்கும். இரு பாலர் பயிலும் பள்ளிகள் எண்ணிக்கை தான், அதிகமாக உள்ளன.

இனிமேல், ஆசிரியரை பணி நியமனம் செய்யும்போதோ, பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தும் போதோ, புதிய உத்தரவை அமல்படுத்த வேண்டும் என, தமிழக அரசு, தெரிவித்துள்ளது. எனவே, ஏற்கனவே, பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு, தற்போது, எந்த பாதிப்பும் வராது. 

இனிமேல், புதிதாக பணி நியமனம் செய்யும்போது, ஆசிரியைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆசிரியர் தேர்வில், ஆசிரியைகள் தான், அதிகளவில் தேர்வு பெறுகின்றனர். கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம், 20 ஆயிரம் ஆசிரியர், பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்களில், ஆண் ஆசிரியர் எண்ணிக்கை, 5,000 வரை தான் இருக்கும். 15 ஆயிரம் பேர், பெண்கள் தான். எனவே, அரசின் உத்தரவை அமல்படுத்துவதில், எவ்வித சிக்கலும் வராது. இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.