Thursday, May 23, 2013

  


            

 ஆசிரியர் தகுதித்தேர்வு  ஆகஸ்ட் 2013 ஒரு பார்வை

 

                                 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் :1500

                                                        பட்டதாரி    பணியிடங்கள் : 13500

 ஆசிரியர் தகுதி தேர்வு 2013 ஆகஸ்ட் மாதம்  17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது ..அதற்கான வழிமுறைகள் ஏற்கனவே ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது ...அதன் தொடர்பான சில செய்திகளை  இங்கு பார்ப்போம் ...யாரும் எதிர்பார்க்கவில்லை ...தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு செல்ல தகுதி தேர்வு வரும் என்று ..வந்தது RTE ACT அமல்படுத்தியது தமிழக அரசு  ....தேர்வுக்கு எத்தனயோ அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன ...பல ஊடகங்கங்கள் தேர்வுக்கு ஆதரவு கரங்கள் நீட்டின ....எது எப்படி இருந்தானும் எதையும் ஏற்று.... சவாலை சந்திப்போம்  என களத்தில் இறங்கியவர்கள் 6 லட்சம் பேர் .....அதில் வாகை சூடியவர்கள் 23000 பேர்.......அனால் இப்போது நடைபெறவிருக்கும்  தேர்வு மிகவும் சவாலானது ...இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் வெறும் 1500 மட்டுமே (விண்ணப்பதாரர்கள் 3 லட்சம் ) பட்டதாரி பணியிடங்கள் பொறுத்தவரையில் 13500 (3.5 லட்சம் பேர் ) விரிவாக பார்ப்போம் ....


                         

  TRB-ஆசிரியர் தகுதித்தேர்வினை (TET) இரண்டு முறை நடத்தியும் இன்னும் தேர்வெழுதுபவர்களுக்கு இத்தேர்வு பற்றிய முழுமையான
விழிப்புணர்வோ புரிதலோ இல்லை.  அக்குறையை முடிந்தவரை நீக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

             TET தேர்வு என்பது அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி உரிமைச்சட்டம் 2009 ன் படி அறிமுகப் படுத்தப்பட்டது. மத்தியிலும் (CTET) வேறு சில மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தபப்பட்ட பிறகே தமிழகத்தில் TET தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. தகுதியும் திறமையும் வாய்ந்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

            முதல் TET தேர்வு அனைவரின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்கி வினாக்கள் மிகத் தரமானதாகவும் 90 நிமிடங்களில் பதிலளிக்க முடியாததாகவும் இருந்ததால் அனைவருக்கும் அதிர்ச்சியே மிஞ்சியது. மிகக்குறைந்த அளவே வெற்றி பெற்றனர்.

             இரண்டாவது தேர்வில் வினாக்களின் தரம் ஓரளவு தெரிந்திருந்ததாலும் நேரம் அதிகரிக்கப்பட்டதாலும் ஓரளவு தேர்ச்சி விகிதம் இருந்தது.

             வினாக்கள் கடினமாக இருக்கிறது என்று புலம்புவதை விட அந்த தரத்தில் உங்களுடைய தயாரிப்பு முறைகள் மற்றும் பயிற்சி முறைகள் இருக்கவேண்டும். கேள்வி பதில்களை  மனப்பாடம் செய்து மட்டும் வெற்றி பெற முடியாது. பாடங்களை புரிந்து கொள்ளவேண்டும். அப்போதுதான் பல கடினமான கேள்விகளை புரிந்து கொண்டு விடையளிக்க முடியும்.

             மேலும்  SET, NET    தேர்வு போல  இத்தேர்வும் ஒரு தகுதித்தேர்வு தான்.  இதில் வெற்றிபெற்றால் நிச்சயம் பணி கிடைக்கும் என்று நினைக்கக்கூடாது. அதன்பிறகு தங்களுடைய 10,12ம் வகுப்பு, பட்டபடிப்பு, D.T.Ed., (or) B.Ed.,  ஆகியவற்றில் உங்களது மதிப்பெண் மற்றும் TET தேர்வில் நீங்கள் பெறும் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் கிடைக்கும் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையிலேயே பணிக்கு தேர்வு செய்யப்படுவீர்கள்.

        இதற்கு முன் நடந்த இரண்டு தேர்வுகளில் வெற்றி பெற்றோரின் எண்ணிக்கை தேவையானதை விட குறைவு. எனவே அனைவருக்கும் பணி கிடைத்தது. ஆனால் இனிவரும் தேர்வுகளில் தேவையை விட வெற்றி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.  அந்நிலையில் அதிக கட்ஆப் மதிப்பெண் வைத்திருப்போர்களுக்கு மட்டும் பணி கிடைக்கும். எந்த பாடத்திற்கு எவ்வளவு ஆசிரியர்கள் தேவையென அறிவிக்கப்படுகிறதோ,அவ்வளவு ஆசிரியர்கள் மட்டுமே பணியமர்த்தப்படுவர்.

    குறிப்பாக கம்யூட்டர் சயின்ஸ் போன்ற பாடங்களில், வெற்றிபெற்றாலும் அப்பாடத்தில் காலிபணியிடங்கள் அறிவிக்கப்படும் போதுதான் பணி கிடைக்கும்.

    தேர்வில் வெற்றிபெற்றால் உடனே வேலை உறுதி என்று எண்ணி, பிறகு மனம் உடையக்கூடாது என்பதற்காகவே இந்த தகவல். தேர்வில் வெற்றிபெற்றும் கட்ஆப் மதிப்பெண் குறைவாக பெற்றதால் வேலை கிடைக்காதவர்கள் அடுத்தமுறை மீண்டும் தேர்வெழுதி தங்களுடைய மதிப்பெண்களை அதிகரித்துக்கொள்ளலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வெழுதி மதிப்பெண்களை அதிகரித்துக்கொள்ளலாம். முடிந்தவரையில் TET தேர்வில் அதிக மதிப்பெண்கள் (அதாவது 135) பெற்றுவிட்டால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.(அதாவது கட்ஆப் மதிப்பெண்களை அதிகரித்துக்கொள்ளலாம்).


       உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தி என்னவென்றால்,இத்தேர்வில் வெற்றிபெற்றால் அரசுப்பள்ளிக்கு மட்டுமின்றி  அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் அரசு ஊதியத்துடன் பணி கிடைக்கும். தனியார் பள்ளிகளிலும் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தற்போது TET தேர்வில் வெற்றிபெற்றோருக்கான தேவை அதிகமாகவே உள்ளது என்பதை மனதில் கொண்டு தேர்வுக்கு மனஉறுதியுடன் தயார்செய்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.

     தற்போது B.Ed, (or) DT.Ed, 2 ம் ஆண்டு படித்துக்கொண்டிருப்போரும் இப்போதிருந்தே தேர்வுக்கு தயாராகலாம். 
          இத்தேர்வைப்பற்றிய முறையான பார்வை,  சரியான வியூகம்,கடின உழைப்பு ஆகியவை இருந்தால் இத்தேர்வில் வெற்றிபெறுவது என்பது ஒன்றும் சவாலான செயல் அல்ல. அனைவரும் தேர்வில் வெற்றிபெற  கல்விவரம் சார்பில் வாழ்த்துகிறோம்.                  

2013-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு

2013-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி வரும் ஜூன் 17-ஆம் தேதி விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூலை 1-ம் தேதி. அன்றைய தேதியில் மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்களை அளிக்கலாம்.
தகுதித் தேர்வின் முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறுகிறது. இரண்டாம் தாள் தேர்வு ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடத்தப்பட இருக்கிறது. இரண்டு தேர்வுகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறும். அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்களை பெறலாம்.
தகுதித் தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டு தாள் ஆகிய இரண்டையும் எழுதுபவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பத்தாரர் நேரடியாக ஒப்படைக்க வேண்டும். தபால் மூலமாகவோ, ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திற்கோ பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பக்கூடாது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் 50 ரூபாய். தேர்வுக்கட்டணம் பொதுப்பிரிவினருக்கு 500 ரூபாய். எஸ்.சி.எஸ்.டி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 250 ரூபாய்.