Sunday, May 26, 2013

தமிழக தொடக்க நடுநிலைப்பள்ளிகள் கோடை விடுமுறைக்குபின் பள்ளி த்திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு_ராஜ் நியூஸ் செய்திகள்.

கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் ஜூன்_3 ல் திறக்க தொடக்கக்கல்வி இயக்கம் ஏற்கனவே உத்திர விட்ட நிலையில்தமிழகத்தில் இந்த ஆண்டு கத்திரி வெயில் பல ஊர்களில் 110*Fதாண்டியது.வழக்கமாக பெய்யும் கோடை மழை இந்த ஆண்டுசுத்தமாக பொய்த்துப்போனது
.வானிலை ஆராய்ச்சிமையம் தமிழகத்தில் மேலும் சில நாடகள் வெயில் அதிகமாக இருக்கவும் அனல் காற்றுவீசவும் வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ள நிலையில்,தமிழகத்தில் தொடக்க நடுநிலைப்பள்ளிகள் மட்டும் பள்ளி திறப்பு தேதி ஒருவார கால தமதத்திற்கு பின் அதாவது ஜூன்_10ல் திறக்க உத்திரவிட அரசு பரிசீலப்பதாகவும் ஓரிரு நாளில் முதல்வர் அறிவிப்பை வெளியிட உள்ளார் எனவும் அரசு வட்டார தகவல்கள் தெரிவித்ததாக ராஜ் நியூஸ் செய்தி வெளியீடு
நன்றி-ராஜ் நியூஸ்- இன்றைய காலை 10மணி செய்திகள்.

No comments:

Post a Comment