ஆன்-லைன் மூலம், பொதுமக்கள் சேவைகளைப் பெறும் வகையில், 14 துறைகளின் விண்ணப்பங்களை, மறு வடிவமைப்பு செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசுத் துறையின் சேவை முழுவதையும், ஆன்-லைன் மூலம் கொண்டு வர, இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்திஉள்ளது. அரசு அலுவலகங்களின் அன்றாடப் பணிகள் உள்ளிட்ட அனைத்தையும், கணினி வழியில் செய்வதற்கான நடவடிக்கைகளை, அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக, மாநில டேட்டா மையம், மாநில அளவிலான நெட்வொர்க், மாநில அரசின் இணையதளம் ஆகியன, துவங்கப்பட்டு உள்ளன.
No comments:
Post a Comment