Tuesday, March 26, 2013

எம்.பில், பி.எச்டி படிப்பில் மாணவர் சேர்க்கை


எம்.பில், பி.எச்டி படிப்பில் மாணவர் சேர்க்கை

புது தில்லியிலுள்ள National University of Educational Planing and Administration-ல் எம்.பில் மற்றும் பி.எச்டி படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.


வழங்கப்படும் படிப்புகள்:
எம்.பில்., பி.எச்டி., பி.எச்டி.,(பகுதி நேரம்)
தகுதி; எம்.பில் படிப்பில் சேர 55 சதவீத மதிப்பெண்களுடன் சோஷியல் சயின்ஸ் மற்றும் அது சார்ந்த படிப்பில் முதுகலை பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி., மாற்றுத்திறனாளி பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானதாகும்.

பி.எச்டி., படிப்பிற்கு Educational Planning and administration பிரிவில் எம்.பில் முடித்திருக்க வேண்டும். பி.எச்.டி பகுதிநேர படிப்பிற்கு கல்வித்தகுதியுடன் முழுநேரம் பணிபுரிபவர்களாக இருக்க வேண்டும். கற்பித்தல்  பிரிவில் 5 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: விண்ணப்ப படிவங்கள் பரிசீலிக்கப்பட்ட பின் மதிப்பெண், தகுதி அடிப்படையில் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். எழுத்துத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்கள் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர். மாணவர் சேர்க்கை மெரிட் அடிப்படையில் நடைபெறும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.200 எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு ரூ.100 வரைவோலை எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nuepa.org என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மே 10 விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விரிவான தகவல்களுக்கு http://www.nuepa.org இணையதளத்தை அணுகலாம். 

No comments:

Post a Comment